தொழில் முனைவோருக்கு காத்திருக்கும் “ஸ்டார்ட் அப்” உலகம்
சேதுராமன் சாத்தப்பன்
ஸ்டார்ட் அப்
கம்பெனிகளுக்கு உதவி செய்யும் கம்பெனிகளைப் பற்றி தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும்
போதே பல தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பல ஏஞ்சல் முதலீட்டுக்
கம்பெனிகள் டெக் ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு தான் உதவி செய்கின்றன என்ற குறையுடன்
கூறினார்கள். இது போன்ற நிகழ்வுகள் 2014ம் வருடம் வரை நடந்தது உண்மை தான். தற்போது
நல்ல ஐடியாக்களுடன் நீங்கள் உங்கள் நான்-டெக் கம்பெனி ஐடியாவையையும் பிட்ச்
செய்தால் பண முதலீடுகள் கிடைக்க நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன.
இன்னும் சிலரின்
குறை என்னவென்றால் இந்த ஏஞ்சல் பண்டிங் இணையதளங்களுக்குள் சென்றோம், கேட்கும்
தகவல்கள் அதிகமாக இருக்கின்றன. இவ்வளவு தகவல்கள் கொடுக்க வேண்டுமா என்று. உங்கள்
கம்பெனியில், உங்களின் புதிய ஐடியாவில் முதலீடு செய்ய முடிவு செய்கிறார்கள்
என்றால் அவர்கள் கேட்கும் தகவல்களை, டாக்குமெண்டுகளை கொடுக்க வேண்டும். உதாரணமாக
வங்கியில் சென்று ஒரு கடன் வாங்கும் போது கூட பல டாக்குமெண்ட்கள் கேட்கிறார்களே,
இதை கொடுக்காமல் கடன் வாங்க முடியாமா? இதற்கு உங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இன்னும் சிலர்
கேட்பது நாங்கள் முன்னமே நடத்தி வரும் கம்பெனியின் விரிவாக்கத்திற்கு கடன்கள்
கொடுப்பார்களா என்று? உங்களது கம்பெனியின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்
பட்சத்திலும், விரிவாக்கம் புதிய தொழில் நுட்ப அடிப்படையில் இருக்கும்
பட்சத்திலும் உங்களுக்கு முதலீடுகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
சென்ற வாரம் நாம்
விரிவாக குறிப்பிட்டிருந்த கம்பெனியின் இணையதள முகவரி தமிழில் மட்டும்குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆங்கலத்தில் விடுபட்டிருந்தது. அந்த இணையதள முகவரி www.indianangelnetwork.com.
இந்த வாரம்
இன்னுமொரு ஏஞ்சல் பண்டிங் நிறுவனத்தை பார்ப்போம். ஹைதராபாத் ஏஞ்சல் நிறுவனத்தை
இந்த வாரம் பார்ப்போம். ஊருக்கு ஒரு ஏஞ்சல் பண்டிங் நிறுவனம் இருப்பது புதிய
ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு வசதியாக இருக்கிறது. www.hyderabadangels.com.
2012ல் தொடங்கப்பட்ட
இந்த ஏஞ்சல் பண்டிங் நிறுவனம், இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, யு.கே.,
சிங்கப்பூர், யூ.ஏ.ஈ., போன்ற நாடுகளிலும் புதிய ஸ்டார்ட் அப்-களில் முதலீடு
செய்கிறது. இதுவரை சுமார் 25 கம்பெனிகளின் 40 கோடி ரூபாய் வரை முதலீடு
செய்துள்ளது. இந்த கம்பெனியில் தற்போது 120 ஏஞ்சல் இன்வஸ்டர்கள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு
மாதம் 300 புதிய கம்பெனிகள் வரை தங்கள் முதலீட்டிற்காக இவர்களிடம் அப்ளை
செய்கின்றனர். இந்தக் கம்பெனிகள் விருப்பம் இல்லையென்றால் அதை 3 வாரங்களுக்குள்
தெரிவித்து விடுகின்றனர். விருப்பம் இருந்தால் பின்னர் 13 வாரங்கள் வரை எடுத்துக்
கொள்கின்றனர். அதிகபட்சமாக 6.5 கோடி வரை முதலீடு வழங்குகின்றனர்.
உங்களுடைய
கம்பெனியின் ப்ளானை இவர்களின் இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அடுத்த வாரம்
இன்னும் பல புதிய ஐடியாக்களுடன் பார்ப்போம். அதுவரையில் காத்திருங்கள்.
டெக்ஸ்டைல்ஸில்
புதிய ஐடியா,
சர்ப்ளஸ்
ஸ்டாக்கை என்ன செய்வது?
இது தான் தற்போது
பல டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிகளிடம் இருக்கும் ஒரு பெரிய கவலை. அதாவது தங்களிடம்
இருக்கும் புதிய டெக்ஸ்டைல்ஸ் சர்ப்ளஸ் ஸ்டாக்கை என்ன செய்வது என்பது தான்? இதற்கு
தீர்வாகத்தான் ஒரு கம்பெனி வந்துள்ளது. அது தான் தான் டெக்ஸ்டைல்ஸ் பாஸ்கட் (www.textilebasket.com). சூட்டிங், சர்ட்டிங், டி-சர்ட், சிபான்
போன்றவைகளில் சர்ப்ளஸ் இருக்குமானால் இவர்கள் மூலம் விற்பனை செய்ய முயற்சி
செய்யலாம். இவர்கள் வாங்குபவர்களையும், விற்பவர்களையும் இணைக்கிறார்கள். இதில்
தான் இவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது. வாங்குபவர்களுக்கு விலை சகாயமாக கிடைக்க
வழி வகுக்கிறது. அதே சமயம் விற்பவர்களுக்கும் தங்களுடைய குறைந்த ஸ்டாக் சரியான
விலையில் விற்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைய செய்யும்.