ஏஞ்சல் பண்டிங்
+++++++++++++
சேதுராமன் சாத்தப்பன்
++++++++++++
இதுவரை கிரவுட் பண்டிங் பற்றியும், பியர் டு பியர் லெண்டிங் பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் ஏஞ்சல் பண்டிங் பற்றி பார்ப்போம்.
ஏஞ்சல் பண்டிங் என்றால் என்ன?
ஏஞ்சல் பண்டிங் என்றால் உபரி பணத்தோடு உள்ளவர்கள் ஸ்டார்ட் அப்-களில் முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள் பணங்களை போட்டு அவற்றைஏரை ஸ்டார்ட் அப்-களில் முதலீடு செய்கின்றனர். அவர்கள்மூலதனத்துடன் வழிகாட்டுதல் அல்லது ஆலோசனைகளையும் வழங்குவார்கள். பியர் டூ பியர் லெண்டிங்கிற்கும், ஏஞ்சல் பண்டிங்கிற்கும் என்ன வித்தியாசம்? பியர் டு பியர் லெண்டிங் என்றால் குறைந்த அளவு கடன் கொடுக்கும் நிறுவனம் ஆகும். அதாவது 500,000 ரூபாய் அதிகபட்சம் கடன் கொடுப்பார்கள். ஆனால் ஏஞ்சல் பண்டிங்கில் கோடிக்கணக்கிலும் பணம் கடன் கொடுப்பார்கள். நிறுவனத்தில் பங்கு கேட்பார்கள்.
ஏஞ்சல் பண்டிங்கில் இரண்டு வகையான முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். ஒன்று குறைந்தபட்சம் 25,00,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இது போன்று முதலீடு செய்பவர்க்ளின் பணங்களை சேர்த்து அவற்றை வைத்து ஏஞ்சல் பண்டிங் மூலம் புதிய ஸ்டார்ட் அப்-களுக்கு உதவி செய்கிறார்கள்.
ஏஞ்சல் முதலீட்டாளர்கள் கூகுள், யாகூ மற்றும் அலிபாபா உள்ளிட்ட பலமுக்கிய நிறுவனங்களைத் தொடங்க உதவியுள்ளனர். இந்த மாதிரிமுதலீடு பொதுவாக ஒரு நிறுவனத்தின் தொடக்க நிலைகளில்ஏற்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்பவர்கள் அந்த ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் சுமார் 30 சதவிகித அளவு பங்குகளைஎதிர்பார்க்கிறார்கள். அதிக வருமானம் பெறும் முதலீட்டில் அதிகஆபத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
இங்கே இந்தியாவில் பிரபலமான ஏஞ்சல் முதலீட்டாளர்களின் கம்பெனிகளில் இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் என்ற் கம்பெனி நல்ல செயல்பாட்டில் இருக்கிறது. அவர்களுடைய இணையதளம்www.indianangelnetwork.com
இந்த நெட்வொர்க்கில் இதுவரை சுமார் 461 தனிப்பட்ட முதலீட்டாளர்களும், 7 நிறுவனங்களும் மெம்பர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு 7 நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. மாதம் 500 க்கும் அதிகமான ஸ்டார் அப்-களை நோக்குகின்றனர்.
உங்களிடம் நல்ல ஐடியாக்கள் இருக்குமானால் இவர்களை நாடுங்கள்.
No comments:
Post a Comment